For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு- சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை

Google Oneindia Tamil News

சென்னை: விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி தர்மபுரியில் நடந்த தே.மு.தி.கவின் "மக்களுக்காக மக்கள் பணி" என்ற நலத்திட்டம் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவை அவதூராக பேசியதாக அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Supreme court stay for trial on Vijayakanth case

இந்நிலையில் இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று விஜயகாந்த் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்று விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை சென்னை ஹைகோர்ட் விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட்.

மேலும், விஜயகாந்த் மனு குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் விஜயகாந்த் நேரில் ஆஜராவதில் இருந்தும் உச்சநீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.

English summary
Supreme court announced interim stay for trail in Chennai high court, about profanity case on DMDK Leader Vijayakanth.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X