சங்கர மடத்துக்கு போய் சங்கராச்சாரியாரிடம் ஜெ. மன்னிப்பு கேட்க வேண்டும்: மீண்டும் சு.சாமி

காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி உள்ளிட்ட 23 பேரை புதுவை நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு வெளியான போதே தமிழக முதல்வர் ஜெயலலிதா, சங்கராச்சரியாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்நிலையில் புதுவை நீதிமன்றத்தில் இருந்து நேராக திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய ஜெயேந்திர சரஸ்வதி இன்று காலை காஞ்சிபுரம் திரும்பினார். அவருக்கு காஞ்சிபுரத்தில் பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் சுவாமியும் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்திரர் சரஸ்வதி சுவாமி மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்தபோதே, இந்த வழக்கு தள்ளுபடியாகும் என்று நான் கூறியிருந்தேன்.
சிலரை திருப்திப்படுத்தவே அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இருந்து சங்கராச்சாரியார்கள் விடுவிக்கப்பட்டது, இந்து மதத்துக்கு கிடைத்த வெற்றி. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமது தவறை உணர்ந்து, சங்கர மடத்துக்கு நேரில் வந்து சங்கராச்சாரியார்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது அரசின் கடமை. தமிழக அரசால் முடியவில்லை என்றால், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றலாம் என்றார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications