கோழைகள்... நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மீது சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்!
நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை கோழைகள் என பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை கோழைகள் என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார்.
நியூஸ் 18 தமிழ்நாடு டிவியில் வெல்லும் சொல் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் சுப்பிரமணியன் சுவாமி கூறியதாவது:

நடிகர் கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் ஆங்காரம் (அகங்காரம்) பிடித்த முட்டாள்.. சினிமாக்காரங்களுக்கு எப்பவும் பயம்தான்...
ரஜினிகாந்த் இலங்கைக்கு பயந்து கொண்டு போகாமல் இருந்துவிட்டார். ஒரு நிகழ்ச்சியின் அழைப்பிதழை ஏற்றுக் கொள்ளும்போதே எல்லாவற்றையும் யோசிக்க வேண்டாமா?
இப்போது வைகோ, திருமாவளவன் ஆகியோர் கூறினார்களாம்... இவர் போகாமல் பயந்து போய் அறிக்கை விடுகிறார்... சினிமாகாரங்க எப்பவுமே பயந்தவங்கதான்...
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications