'சுவாதி கொலை வழக்கு' படத்தை சுவாதி பெற்றோருக்கு போட்டு காட்ட ரெடி.. லாபத்திலும் பங்கு: இயக்குனர்!
சமூக நோக்கத்துடனே சுவாதி கொலை வழக்கு திரைப்படமாக்கப்படுவதாக இயக்குனர் ரமேஷ் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை : சுவாதி கொலை வழக்கு படத்தில் சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை என்று இயக்குனர் ரமேஷ் செல்வன் விளக்கமளித்துள்ளார்.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண் மென்பொறியாளர் சுவாதி 2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலைசெய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இந்த கொலை வழக்கு சம்பவம் வேலைக்கு சென்று வரும் பெண்களின் பாதுகாப்பிற்கான கேள்வியை எழுப்பியது.
சுவாதி கொலை வழக்கில், திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் குற்றவாளி என்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிகிச்சைக்குப் பிறகு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பரபரப்பான கொலை வழக்கு
ஆனால் சிறையிலிருந்த ராம்குமார், அங்கிருந்த மின்சார வயரைக் கடித்து கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்டார். சுவாதி கொலையைப் போலவே ராம்குமார் தற்கொலையும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

திரைப்படத்தால் சர்ச்சை
இந்நிலையில், இயக்குநர் ரமேஷ் செல்வன் என்பவர், 'சுவாதி கொலை வழக்கு' என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்டர்கள், தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தந்தை புகார்
'சுவாதி கொலை வழக்கு' படத்துக்குத் தடை விதிக்கக்கோரி, சுவாதியின் தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன், டிஜிபி-யிடம் நேற்று புகார் மனு அளித்துதார். இதனையடுத்து படம் குறித்து சென்னையில் இயக்குனர் ரமேஷ் செல்வன் விளக்கமளித்துள்ளார்.

சமூக நலன்
"இந்த திரைப்படத்தில் சுவாதியை தவறாக சித்தரிக்கவில்லை. அதே போன்று ராம்குமாரை குற்றவாளியாக காட்டியும் படம் எடுக்கப்படவில்லை, சமூக நலனை மையமாக வைத்தே சுவாதி கொலை வழக்கு திரைப்படமாக்கப்பட்டுள்ளது".

லாபத்தில் பங்கு
சுவாதி கொலை வழக்கு படத்தை அவர்களின் பெற்றோருக்கு திரையிட்டு காட்டத் தயார். மேலும் படம் திரையிடப்படுவதன் மூலம் வரும் லாபத்தை சுவாதி மற்றும் ராம்குமார் குடும்பத்தினருக்குத் தரத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications