தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. உயர் அதிகாரிகளுடன் கிரிஜா வைத்தியநாதன் அவசர ஆலோசனை
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வரும் 7ம் தேதி ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய்த் துறை உயரதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது.
தமிழகத்துக்கு அதிக மழை காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் மற்றும் அது சார்ந்த பல முன்னெச்சரிக்கை, அறிவுரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ளது.
[ஒரே நாளில் 25 செ.மீ மழைக்கு வாய்ப்பு.. தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. பாதுகாப்பாக இருப்பது எப்படி? ]
அதன்படி மக்களுக்கு தேவையான நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெற செய்ய வேண்டும், மின் இணைப்புகளை முன்கூட்டியே துண்டிக்க வேண்டும் என்பது போன்றவை அதில் உள்ளன.
இது குறித்தெல்லாம் கிரிஜா வைத்தியநாதன் இன்று ஆலோசனைகளை மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications