நீட்... மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டது.. ஹைகோர்ட் பரபரப்பு கருத்து
சென்னை: மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக சென்னை ஹைகோர்ட் கருத்து தெரிவிித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லை சேர்ந்த மாணவி, கிருத்திகா என்பவர், மாநில பாடத் திட்டத்தில் பயின்று நல்ல மதிப்பெண் பெற்றார்.
ஆனால் நீட் தேர்வில் அவரால் சோபிக்க முடியவில்லை. எனவே மாநில பாடத் திட்டப் படியே மருத்துவ சேர்க்கை இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஹைகோர்டடில் வழக்கு தொடர்ந்தார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், நீட் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு தமிழக அரசு அநீதி இழைத்துவிட்டதாக தெரிவித்தார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய முடிவு எடுக்கவில்லை தமிழக அரசு என்று கிருபாகரன் குற்றம்சாட்டினார்.
மேலும், மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடப் பிரிவுகளில் பயின்ற மாணவர்கள் பட்டியலை மதியம் 2.30 மணிக்குள் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய நீதிபதி, அரசுக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications