ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு..ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..விழுப்புரம் எஸ்பியாக சஷாங்க் சாய் நியமனம்
சென்னை: தமிழகத்தில் 39 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக சஷாங்க் சாய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 39 போலீஸ் உயர் அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய டி.ஜி.பி.க்கள் பணி நியமனம் செய்யப்பட்டுளனர். ஆவடி போலீஸ் கமிஷனராக அருண் பதவியேற்கிறார்.
*அருண்- சிவில் சப்ளை பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர் ஆவடி புதிய காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
*ஆல்பர்ட் ஜான்- சென்னை பூக்கடை துணை ஆணையராக பணியாற்றும் இவர் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
*ஸ்ரேயா குப்தா- மாநில குற்ற ஆவணக் காப்பக கண்காணிப்பாளராக உள்ள இவர் சென்னை பூக்கடை துணை ஆணையராக நியமனம்.

*சீனிவாசன்- நெல்லை நகர துணை ஆணையராக (கிழக்கு) பணியில் உள்ள இவர் சென்னை நகர நிர்வாக பிரிவு துணை ஆணையராக நியமனம் .
*ஹர்ஷ் சிங்- சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் பொறுப்பில் இருந்து வரும் இவர் நாகப்பட்டினம் எஸ்.பியாக நியமனம்.
*ஜவஹர்- நாகப்பட்டினம் எஸ்.பியாக இருக்கும் இவர் ஈரோடு மாவட்ட எஸ்.பியாக நியமனம்.
*சசி மோகன்- ஈரோடு மாவட்ட எஸ்.பியான இவர் சென்னை கியூ பிரிவுக்கு சூப்பிரண்டாக நியமனம்.
* பி.சரவணன்- காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த இவர் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை ஆணையராக நியமனம்.
* ராஜேஷ் கண்ணன்- வேலூர் மாவட்ட எஸ்.பியாக இருந்த இவர் நாமக்கல் மாவட்டத்துக்கு எஸ்.பியாக நியமனம்.
*கலைச்செல்வன் - நாமக்கல் மாவட்ட எஸ்.பியான இவர் மாநில குற்ற ஆவணக் காப்பக சூப்பிரண்டாக நியமனம்.
* சரவணன்- ஆவடி ஆணையகரத்தில் செங்குன்றம் துணை ஆணையராக பணியில் உள்ள இவர் வேலூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம் .
*சாய் பிரனீத் - மதுரை நகர சட்டம் -ஒழுங்கு துணை ஆணையராக(தெற்கு) பணியாற்றும் இவர் செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பியாக நியமனம் .
*பிரதீப் - காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர் மதுரை நகர சட்டம்-ஒழுங்கு(தெற்கு) துணை ஆணையராக நியமனம்.
*ஸ்ரீதேவி - திருச்சி தெற்கு துணை ஆணையராக பணியாற்றும் இவர் சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு கண்காணிப்பாளராக பணி நியமனம்.
*செல்வக்குமார் - தமிழ்நாடு கமாண்டோ பிரிவு சூப்பிரண்டான இவர் திருச்சி தெற்கு துணை ஆணையராக நியமனம்.
* பாலகிருஷ்ணன் - திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பியாக பணியாற்றும் இவர் ஆவடி ஆணையகரத்தில் செங்குன்றம் துணை ஆணையராக நியமனம் .
* ராஜேந்திரன்- சென்னை அமைப்பு சார்ந்த குற்ற புலனாய்வு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு(2) சூப்பிரண்டாக நியமனம்.
* சாமிநாதன் - சென்னை பாதுகாப்பு சி.ஐ.டி. பிரிவு(2) சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் திருப்பூர் மாவட்ட எஸ்.பியாக நியமனம்.

* சேஷாங் சாய்- திருப்பூர் மாவட்ட எஸ்.பியாக பணியில் உள்ள இவர் விழுப்புரம் மாவட்ட எஸ்.பியாக நியமனம்.
*அருண் பாலகோபாலன்- சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் பிரிவு சூப்பிரண்டாக பணியாற்றும் இவர் தமிழ்நாடு கமாண்டோ பிரிவுக்கு மாற்றம் .
* சரவணக்குமார்- மாநில உளவுப்பிரிவு தலைமையக கூடுதல் கண்காணிப்பாளராக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று லஞ்ச ஒழிப்பு பிரிவு தெற்கு சரக சூப்பிரண்டாக நியமனம் .
* வினோத் சாந்தாராம் - காஞ்சீபுரம் தலைமையக கூடுதல் கண்காணிப்பாளரான இவர் பதவி உயர்வு பெற்று சி.பி.சி.ஐ.டி. சிறப்பு பிரிவு(1) சூப்பிரண்டாக நியமனம்.
* கீதாஞ்லி- கரூர் மாவட்ட 'சைபர் கிரைம்' கூடுதல் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று சென்னை 'சைபர் கிரைம்' துணை ஆணையராக நியமனம்.
* காமினி - தாம்பரம் ஆணையரகத்தில் தலைமையக கூடுதல் ஆணையராக பணியில் உள்ள இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு ஐ.ஜி.யாக மாற்றம்.
*ராதிகா- சென்னை ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றும் இவர் சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி.யாக மாற்றம்
* அன்பு- வடசென்னை கூடுதல் ஆணையராக பணியாற்றும் இவர் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக நியமனம்.
* லோகநாதன்- சென்னை தலைமையக கூடுதல் ஆணையநராக பணியாற்றும் இவர் வடசென்னை கூடுதல் ஆணையராக கூடுதல் பொறுப்பையும் கவனிப்பார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்!












Click it and Unblock the Notifications