சகாயம் குழு விவகாரத்தில் ஷீலா பாலகிருஷ்ணனுடன் மோகன் வர்கீஸ் மோதல்?- அதனால் டிரான்ஸ்பர்?
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் திடீரென டம்மி பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டதன் பின்னணியில் கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை விவகாரம்தான் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2011ஆம் ஆண்டு அதிமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தற்போது 5வது தலைமைச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற போது மாலதி, தலைமைச் செயலாளராக இருந்தார். அவர் விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் தேபேந்திரநாத் சாரங்கி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து ஷீலா பாலகிருஷ்ணன் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டார். ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வைத் தொடர்ந்து மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமைச் செயலாளரானார். ஆனாலும் ஷீலா பாலகிருஷ்ணன் தமிழக அரசின் ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர வைக்கப்பட தலைமைச் செயலாளர் என்ற பதவி டம்மியானது.
இதனால் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் சுதந்திரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்காத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள். குறிப்பாக கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்படும் நிலைக்கு மோகன் வர்கீஸ் சுங்கத் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டார் என்பதுதான் அவர் டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டதன் பின்னணி என்று கூறப்படுகிறது.
அதாவது கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மோகன் வர்கீஸ் சுங்கத்தை 'மக்களின் தலைமை செயலாளர்" மூலமாக மேலிடம் நெருக்கியதாக கூறப்படுகிறது.
ஆனால் நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராக செயல்படப் போய் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை எதிர்கொள்ள நேரிடுமே என்று மோகன் வர்கீஸ் சுங்கத் ஆட்சேபனை தெரிவித்திருக்கிறார். இந்த ஆட்சேபனையும் எதிர்ப்பும்தான் பெரிய அளவில் கருத்து வேறுபாடாக வெடித்திருக்கிறது. இருப்பினும் மோகன் வர்கீஸ் சுங்கத்தின் விருப்பமின்றியே இந்த விவகாரத்தில் 'மக்களின் தலைமை செயலாளர்' ஷீலா பாலகிருஷ்ணன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே திடீரென மோகன் வர்கீஸ் சுங்கத் தற்போது டம்மி பதவியாக தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அகாடமிக்கு மாற்றப்பட்டிருக்கிறார் என்கின்றன தலைமைச் செயலக வட்டாரங்கள்.
மேலும் இன்னும் 3 மாதங்களில் ஓய்வு பெற உள்ள நிலையில் மோகன் வர்கீஸ் சுங்கத் திடீரென டம்மி பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டிருப்பதால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications