மழை வரவே இல்லை... சென்னையில் பயங்கர புழுக்கம்... ஆறுதல் தராத கத்திரியின் முதல் நாள்
சென்னை: அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்று தொடங்கி வருகிற 29 ஆம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கவுள்ள நிலையில் சென்னையில் காலையிலிருந்தே பயங்கர புழுக்கமாக இருக்கிறது.
இப்படி அதிகமாக "குமுறல்" இருந்தால் மழை வரும் என்பார்கள். அதற்கேற்ப சில இடங்களில் மழையும் சொட்டு வைத்தது. ஆனால் இதுவரை மழை இல்லை.

இதற்கிடையே, அக்னி நட்சத்திரக் கால கட்டத்தில் வெயில் வாட்டி வதைக்கும் என்றாலும் மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோடை வெயில் அதிகரிக்க தொடங்கும் வேளையில், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரியில் நாளை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது'' என்றனர்.
இன்று காலை முதலே சென்னையில் வெயில் சற்று மூடி மூடி அடிக்கிறது. அதிக புழுக்கமாக உள்ளது. சில இடங்களில் காற்று வீசுகிறது. மழைதான் எப்போது வரும் என்று தெரியவில்லை.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
ஆதவ் அர்ஜுனா மைத்துநர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு ரூ 328 கோடி சொத்தா? வியக்க வைக்கும் வேட்புமனு! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications