ரஜினியின் முகம் பார்க்க காலையில் இருந்து போயஸ் கார்டனில் காத்துக்கிடக்கும் ரசிகர்கள்!
நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து உள்ளனர்.
Recommended Video

சென்னை : நடிகர் ரஜினியின் பிறந்தநாளான இன்று அவரை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் இன்னமும் போயஸ் கார்டன் வீட்டின் முன் குவிந்து உள்ளார்கள்.
தமிழ் திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 68வது பிறந்த நாளைக் கொண்டாடிவருகிறார். வழக்கமாக அவரது ஒவ்வொரு பிறந்த நாளிலும் தனது வீட்டிலோ அல்லது கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திலோ ரசிகர்களை ரஜினி சந்திப்பார்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரஜினி பிறந்த நாள் அன்று ரசிகர்களை சந்திக்கவில்லை. மேலும், அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னதாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்களை ரஜினி சந்தித்தார்.
அப்போது அரசியலுக்கு தான் வருவது குறித்து பதிலளித்த ரஜினி, போர்வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார். மேலும், சமீபத்தில் மந்த்ராலயம் சென்ற ரஜினி, தனது பிறந்தநாள் சமயத்தில் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அதனால், ரஜினி ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக இருந்தனர். இந்நிலையில், பிறந்தநாளான இன்று அரசியல் கட்சி குறித்து அறிவிக்கப்போகிறார் என்கிற தகவல் பரவியதால் பல்வேறு ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் அவரது வீட்டிலும், திருமண மண்டபத்திலும் குவிந்தனர்.
காலையிலேயே ஏற்பட்ட கூட்டத்தால் கோடம்பாக்கம் , போயஸ் கார்டன் பகுதியில் போக்குவரத்து ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு போலீஸார் வந்து நிலைமையை சரி செய்தனர். இப்போது வரை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீட்டின் முன் ஏராளமான ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர்.
அரசியல் குறித்த அறிவிப்பு கூட இப்போது வேண்டாம், முகத்தை மட்டுமாவது காட்டுங்கள் தலைவா அதுவே போதும் என்று அனைத்து ரசிகர்களும் அவருக்காக ஏங்கி, காலை முதல் கால் கடுக்க நின்று கொண்டு இருக்கிறார்கள். மாலை ஆகியும் இதுவரை ரஜினி வந்து சந்திப்பதற்கான அறிகுறிகள் இல்லாத நிலையில், ரசிகர்கள் மனம் தளராமல் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், ரஜினி போயஸ் கார்டன் வீட்டில் இல்லை என்றும், கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications