தமிழக தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு... மலேசிய ஹோட்டல் உரிமையாளர் வெறிச் செயல்
திருச்சி: மலேசியாவில் ஓட்டலில் வேலை பார்த்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளியை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து ஓட்டல் உரிமையாளர் வெறிச் செயலலில் ஈடுபட்டுள்ளார்.
பட்டுக் கோட்டை மாவட்டம் அபிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மலேசியாவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில், ஏதோ சில காரணங்களுக்காக ஓட்டல் வேலையில் இருந்து விலகிவிட்டார் கண்ணன். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ஓட்டல் உரிமையாளர், கண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கண்ணனை, இந்திய தூதரகம் மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளது. தற்போது அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் தனது மகனுக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தந்தை ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications