வெள்ளப்பெருக்கு ஒருபக்கம், தண்ணீர் பஞ்சம் மறுபக்கம்.. உழவர் முன்னணி சொல்வதை கேளுங்க
சென்னை: ஒருபக்கம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இப்பிரச்சினைகளை தீர்க்க, தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்றும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வெங்கட்ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை நீர் நிலைகள் நிரம்பும் வகையில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கிருட்டிணகிரி மாவட்டத்தில், ஒசூர் கெலவரப்பள்ளி அணை நீர்மட்டம் 42.48 அடியாகவும் (மொத்த கொள்ளளவு 44.28 அடி), கிருட்டிணகிரி அணையின் நீர்மட்டம் 51 அடி (மொத்த கொள்ளளவு 52 அடி), சாத்தூர் அணையின் நீர்மட்டம் 110 அடி (மொத்த கொள்ளளவு 119 அடி)யாக உள்ளன.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே இருக்கும் முக்கிய நீர்தேக்கங்களின் நிலை இது. இன்னொருபுறம், கர்நாடக மாநிலத்தில் பெய்த பெருமழையால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், மறுபுறம் கிருட்டிணகிரி மாவட்டத்தின் தென்பெண்ணை ஆற்று கரையோரப் பகுதிகளான உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை பகுதிகளில் பெரும்பாலான ஏரி - குளங்கள் நிரம்பாமல் தண்ணீர் தட்டுப்பாடே நிலவுகிறது.
தொடர்ச்சியான வறட்சியாலும், முறையான நீர் நிலைப் பராமரிப்பின்மையாலும் இப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 1000 அடிக்குக் கீழ் சென்று வேளாண்மையும், குடி தண்ணீரும் பெரும் தட்டுப்பாட்டில் தவிக்கின்றன.
அதேநேரம், இப்போது வந்தது போல சில ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தென்பெண்ணையில் பெருவெள்ளம் ஏற்படுவதும், அதில் கிடைக்கும் தண்ணீர் உத்தனப்பள்ளி - ராயக்கோட்டை மக்களுக்கு கிடைக்காமல் கடலில் சென்று கலப்பதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கிடைக்கும் நீரை பயனுள்ள வகையில் சேகரித்து வேளாண்மைக்கு பயன்படுத்தும் வகையில், தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக உழவர் முன்னணியின் தலைமையில் அப்பகுதி உழவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.
கருக்கநல்லி, பெரிய ஏள்ளி, குட்டை , கீழ் ஏலி, மேல் ஏலி, இராசப்பன் குட்டை உள்ளிட்ட 12 ஏரி - குளங்களை இணைக்கும் வகையில் தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தினால், வெள்ளப்பெருக்கு அபாயமும் குறையும், இப்பகுதிகளின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வேளாண்மையும் செழிக்கும்.
எனவே, நேர்ந்துள்ள இப்பெருவெள்ளத்தை ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக எடுத்துக் கொண்டு தமிழ்நாடு அரசு தென்பெண்ணை கிளை வாய்க்கால் திட்டத்தை, வரும் நிதியாண்டிற்குள் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என தமிழக உழவர் முன்னணி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications