சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும்: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

Subscribe to Oneindia Tamil

சேலம்: வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிமுகவுடன் கூட்டணியை தொடரும் என அக்கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சேலம் மாவட்ட அலுவலக திறப்புவிழா நடைபெற்றது. விழாவில் கட்சியின் நிறுவனத்தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

tamilaga Valvurimai Katchi alliance with admk

அப்போது அவர் கூறுகையில், கடலூர், சென்னை, வேலூர் போன்ற பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. மழைநீரில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக அரசு சிறப்பாக செயலாற்றி மீட்டுள்ளது. முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அதிகாரிகள் நேரில் சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது. நீர்நிலைகளில் தான் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நகர பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். மக்களுக்கான எங்களது போராட்டத்தில் நாங்கள் தாக்கப்பட்டோம். அந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சி அதிமுகவுடன் தான் கூட்டணியை தொடரும். நாங்கள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறோம், எந்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்ற தகவலை அ.தி.மு.க. தலைமைக்கு நாங்கள் முன்கூட்டியே தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு வேல்முருகன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+