குறுகிய கண்ணோட்டத்துடன் இன்னும் எத்தனை நாள் இருக்கப் போகிறது கர்நாடகா?.. தமிழருவி மணியன் வேதனை
சென்னை: தங்கள் மாநில நலனை மட்டுமே முன் நிறுத்தி குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படும் கர்நாடகத்தின் போக்கு தொடர்வது, இந்திய ஒருமைப்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது. கன்னடர்கள் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
கர்நாடகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று சார்பு இன்றி தன்னந்தனியே இயங்க இயலாது. இதனை கருத்தில் கொண்டு, சுயநலக்கார கன்னடர்கள் வன்முறையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை
கர்நாடகத்தில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை, நமக்கு மிகுந்த கவலையையும், வருத்தத்தையும் உருவாக்கி இருக்கிறது. காவிரி நீரில் தனக்குண்டான உரிமையையும், பங்கையும் ஒவ்வொரு முறையும் உச்ச நீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டியே தமிழகம் பெற்று வரும் சூழல் நிலவி வருகிறது. கடந்த ஆகஸ்ட் வரை வழங்கப்படவேண்டிய தண்ணீரில் 61 டிஎம்சி மீதம் உள்ள நிலையில் நீதிமன்றத் தீர்ப்புப்படி 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டதற்கு கன்னட அடிப்படைவாதிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருந்த நிலையில், இன்று கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்த மறு சீராய்வு மனு உச்ச நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறுகிய கண்ணோட்டம்
இதனைப் பின்னணியாகக் கொண்டு தமிழ்நாட்டுப் பதிவு கொண்ட வாகனங்கள், தமிழ் மக்களின் வணிக நிறுவனங்கள் வன்முறைக் கும்பல்களால் தாக்கப்பட்டு வருகின்றன. தங்கள் மாநில நலனை மட்டுமே முன் நிறுத்தி குறுகிய கண்ணோட்டத்துடன் செயல்படும் இந்த போக்கு தொடர்வது, இந்திய ஒருமைப்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வியை எழுப்புகிறது.

காங்கிரஸ் - பாஜகவின் அக்கறையின்மை
கர்நாடகத்தில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு தமிழகத்தில் வலு இல்லை என்பதால், தமிழக நலன் குறித்த அக்கறை சிறிதும் இல்லை; தமிழகத்தில் உள்ள இக்கட்சிகளின் மாநில அமைப்புகளை தேசியத் தலைமைகள் மதிப்பதே இல்லை. கர்நாடக அதிகார அரசியலில் தங்களை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தமிழக வாழ்வாதார உரிமைகள் புறக்கணிக்கப்படுவதை பற்றி கவலை கொள்வதும் இல்லை. காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பதற்கான அறிவிக்கை வெளியிடத் தாமதமாவது ஏன்? என்பதை மத்திய அரசு விளக்கியாக வேண்டும்.

தனித் தனியாக இயங்க முடியாது
இன்றைய சூழலில், கர்நாடகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் ஒன்றுக்கொன்று சார்பு இன்றி தன்னந்தனியே இயங்க இயலாது, இதனை கருத்தில் கொண்டு, சுயநலக்கார கன்னடர்கள் வன்முறையை உடனடியாகக் கைவிட வேண்டும். கர்நாடக நிகழ்வுகளைப் பார்த்து தமிழ்நாட்டு மக்கள், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது. இரு மாநில மக்களின் நலனைப் பேணுவதற்கு உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும் என்று ஆட்சி பொறுப்பில் இருப்போரை காந்திய மக்கள் இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications