பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வான நடிகர் ரஜினிக்கு தமிழிசை வாழ்த்து !
சென்னை: பத்ம விபூஷன் விருதுக்கு தேர்வு பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது பல திறமையாளர்களுக்கும், சமூக அக்கறை கொண்டவர்களுக்கும், நல்ல கருத்துக்களை மக்களிடம் பதிய வைப்பவர்களுக்கும், கலையை நாள் தோறும் வளர்த்து கொண்டிருப்பவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தமிழ் திரையுலகிற்கு பல்லாண்டு காலமாக கலை சேவை ஆற்றி வரும் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த விருது கிடைத்தமைக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நதிகள் இணைய வேண்டும். நாட்டின் வளம் பெருக வேண்டும் என்று மாபெரும் திட்டத்தை வாஜ்பாய் அறிவித்த போது ரஜினி சமூக அக்கறை ஒரு உதாரணம் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வான ரவிசங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழிசை இவ்வாறு தமிழிசை வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.