இன்னும் பேசவே ஆரம்பிக்கலையே... தமிழிசை செளந்தரராஜன்

பாஜக தேசிய செயலாளரான தமிழிசை இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு நாளையொட்டி இன்று நடைபெற்ற ஒற்றுமை ஓட்டத்தில் இளைஞர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.அவரது அழைப்பை ஏற்று ஏராளமான இளைஞர்கள் இந்த ஒற்றுமை ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஒற்றுமை ஓட்டம் தமிழகம் முழுவதும் சிறப்பாக நடந்து வருகிறது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர்களின் ஓட்டு எங்களுக்குத்தான்.
தமிழகத்தில் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சு வார்த்தை எதுவும் இன்னும் தொடங்கவில்லை. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே எங்கள் கூட்டணியில் இருந்தவர். அந்த அடிப்படையில் தான் அவர் எங்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசி இருப்பார்.
டெல்லியில் நாங்கள் தனிப் பெரும் கட்சியாக திகழ்ந்த போதும் ஆட்சி அமைக்க அவசரம் காட்டவில்லை. இப்போது உள்ள சூழ்நிலையில் மீண்டும் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்தாலும் அதை சந்திக்க பா.ஜ.க. தயாராக உள்ளது. அது போல ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அதில் வெற்றி பெற்று பா.ஜ.க. தலைநகர் டெல்லியை ஆளப் போவது உறுதி. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெறும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications