காங்கிரஸ் ஜோதிமணி ஒரு விளம்பர பிரியர்.. தமிழிசை தாக்கு !
பா.ஜ.க. மீது காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி வேண்டும் என்றே பொய் புகார் கூறுகிறார் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி ஒரு விளம்பர பிரியர். தன்னுடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா மீது வேண்டும் என்றே பொய் புகார் கூறுகிறார் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான ஜோதிமணி குறித்து சமூக வலைதளங்களில், கடந்த வாரம் சிலர் ஆபாசமாக பதிவிட்டனர். இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதற்கு கண்டனம் தெரித்தனர்.

இதையடுத்து ஜோதிமணி கரூர் மாவட்ட எஸ்.பி.யிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தன்னை வாட்ஸ்-அப், பேஸ் புக்கில் ஆபாசமாக சித்தரித்து பாரதிய ஜனதா கட்சியினர் மிரட்டல் விடுப்பதாக கூறி இருந்தார்.
இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், ஜோதிமணி ஒரு விளம்பர பிரியர். தன்னுடைய பெயர் வர வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா மீது வேண்டும் என்றே பொய் புகார் கூறுகிறார். ஏற்கனவே அவர் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார். தன் பெயர் எப்போதும் பிரபலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் எதையும் செய்வார். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஜோதிமணி ஒரு விளம்பரப் பிரியர் என்றும் அவரைத் தரக்குறைவாகத் திட்டியதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணியின் துணைத் தலைவர் சூர்யா கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications