பாஜகவுக்கு ரஜினிகாந்த் வந்தால்தான் பலம் என்பதை ஏற்க முடியாது – தமிழிசை
சென்னை: பாஜகவுக்கு ரஜினிகாந்த் வந்தால் வரவேற்போம். அதேசமயம், அவர் வந்தால் மட்டுமே கட்சிக்குப் பலம் என்பதை ஏற்க முடியாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து, அவரே இன்னும் முடிவு செய்யவில்லை. இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அதுகுறித்து அடிக்கடி அவராகவே பேசி வருகிறார்.

கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், " பாஜகவுக்கு ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே பலம் என்பதை ஏற்க முடியாது. தேசிய சிந்தனை கொண்ட திரைப்பட கலைஞரான ரஜினி அவர்களை நாங்கள் வந்தால் வரவேற்போம்.
ஆனால், ரஜினி வந்துதான் பாஜக பலத்தை கூட்ட முடியும் என்றால் அதனை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். கொள்கை பிடிப்புள்ள தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்சி வளர்ந்து வருகிறது. ரஜினி வந்தால் கூடுதல் பலமாக இருக்கும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications