தமிழகத்துக்குள் நுழைந்து கொடிக் கம்பம் நட்ட கேரள கம்யூனிஸ்டுகள்- எல்லையில் பதற்றம்!
தமிழகத்துக்குள் நுழைந்து கேரள கம்யூனிஸ்டுகள் கொடிக்கம்பம் நட்டதால் எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.
தேனி: தமிழகத்தின் கம்பம்மெட்டுக்குள் நுழைந்து கேரளா கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடி ஏற்றினர். இதைத் தட்டிக் கேட்ட தமிழக பத்திரிகையாளர்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கி தரக்குறைவாகப் பேசியதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.
தமிழகத்துக்கு கர்நாடகம் காவிரி தண்ணீரைத் தராமல் பிரச்சனை செய்கிறது. இது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது.

கேரளா பிடிவாதம்
ஆந்திரா அரசு, பாலாற்றின் குறுக்கே அணைகட்டு தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை சிக்கலுக்குள்ளாக்க முயற்சித்து வருகிறது. கேரள அரசு, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாது என்று பிடிவாதம் காட்டுகிறது.

எல்லைப் பிரச்சனை
தற்போது கேரளா எல்லைப் பிரச்சனையை உருவாக்க முயல்கிறது. தமிழகத்தின் கம்பம்மெட் பகுதிக்குள் நுழைந்து கேரளா கம்யூனிஸ்ட் கட்சியினர் கொடிக் கம்பம் நட்டி கொடி ஏற்ற முயற்சித்துள்ளனர். இதைத் தட்டிக்கேட்ட கம்பம் வனத்துறை அதிகாரிகளிடம் அவர்கள் தகராறு செய்துள்ளனர்.

போலீசில் புகார்
இதையடுத்து,வனத்துறையினர் கம்பம் வடக்குக் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த செய்தியை அறிந்த பத்திரிகையாளர்கள், கொடிக்கம்பம் நிறுவப்பட்ட இடத்துக்கு செய்தி சேகரிக்க சென்றனர்.

எல்லையில் பதற்றம்
ஆனால், கேரள கம்யூனிஸ்டுகளும் காவல்துறையினரும் தமிழக பத்திரிகையாளர்களைத் தாக்க முயற்சித்தனர். அதுமட்டுமில்லாமல் தரக்குறைவாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டவரை.. ரூ.34 கோடி 'ரத்த பணம்' செலுத்தி மீட்ட கேரள மக்கள் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications