இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்தது தமிழகம் !
தமிழகம் இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை தமிழகம் இழந்துவிட்டது.
சென்னை: தமிழகம் இருபெரும் அரசியல் ஜாம்பவான்களை இழந்துவிட்டது வேதனையிலும் வேதனை.
தமிழகத்தில் எத்தனை பெரும் கட்சிகள் இருந்தாலும் அரசியல் கட்சிகள் என்றால் திமுக மற்றும் அதிமுக ஆகும். இவை இரண்டு மட்டுமே ஆட்சிக் கட்டிலில் மாறி மாறி அமரும்.
திமுகவின் தலைவராக கடந்த 50 ஆண்டுகளாக கருணாநிதி நீடித்து வந்தார். அது போல் அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாவும் தன் பணியை செவ்வனே செய்து வந்தார்.

கட்சியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பு
ஜெயலலிதா என்ற தலைவர் பெண்களுக்கே முன்னுதாரணமாக இருந்தவர். அவரை பார்த்து அரசியலுக்கு வந்த பெண்கள் ஏராளம். கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தார். பெண்களுக்கான நலத்திட்டங்களை செய்திருந்தார்.

ஜெ. மறைவு
தொடர்ந்து 2 முறை முதல்வராக வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த 2016-ஆம் அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற ஜெயலலிதா கடந்த 2016 -ஆம் ஆண்டு டிசம்பர் 5 -ஆம் தேதி மறைந்தார்.

காது கொடுத்து கேட்கும் தலைவர்
கருணாநிதி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைகளை முன்னெடுத்து இறுதி வரை போராடினார். அதுவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏராளமான நன்மைகளை செய்துள்ளார். தன் கட்சியையும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

5 முறை முதல்வர்
திமுக தலைவர் கருணாநிதி 13 முறை எம்எல்ஏவாக இருந்தவர். அதுபோல் 5 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் மிக்க தலைவராவார் கருணாநிதி. எம்ஜிஆர் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி இவர்களுள் இருந்த நட்பு அப்படியேதான் இருந்தது.

அரசியலில் இல்லாவிட்டாலும்
கடந்த இரு ஆண்டுகளாக உடல்நிலை பாதிப்பு காரணமாக எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார் கருணாநிதி. கட்சியிலும் நேரடியாக அவர் ஈடுபடாவிட்டாலும் ஆலோசனைகளை மட்டும் வழங்கி வந்தார். இந்நிலையில் கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இன்று மாலை காலமானார்.

வெற்றிடம்
அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் ஆகியோருக்கு அடுத்து இரு பெரும் அரசியல் ஜாம்பவான்களாக இருந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும்தான். தற்போது அவர்கள் இருவரும் இல்லாத நிலையில் தமிழகம் இரு பெரும் தலைவர்களை இழந்து தவிக்கிறது. இருவரது ஆட்சியிலும் சில குறைகள் இருந்தாலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்ததன் மூலம் தமிழக மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெறுவர் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications