டெங்குவிற்கு 18 பேர் மட்டுமே பலி... மத்திய அரசிடம் தமிழக அரசு அறிக்கை!
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 18 பேர் மட்டுமே பலியாகியுள்ளதாக மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சென்னை : டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 18 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள் குறித்து மத்திய அரசட்ம அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பிற்கு அக்டோபர் 12 ம் தேதி வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12,324 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் 1178 பேரும், சென்னையில் 1136 பேரும், சங்கரன்கோயிலில் 1072 பேரும், கோவையில் 942 பேரும், திருப்பூரில் 784 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் 777 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூரில் 4 பேரும், ஈரோடு, சேலம், கோவையில் தலா 3 பேரும், கரூரில் 2 பேரும், திருச்சி, தர்மபுரி, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகியவற்றில் தலா ஒருவரும் பலியாகி உள்ளதாக மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ள தமிழக அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 9ம் தேதி வரை 40 பேர் டெங்கு நோய்க்கு பலியாகியுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது. மேலும் 11 ஆயிரத்து 700 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் 18 பேர் மட்டுமே பலியாகி இருப்பதாக தமிழக அரசு குறிப்பிட்டு இருப்பது முன்னுக்குப் பின் முரணான தகவலாக உள்ளது.












Click it and Unblock the Notifications