தஞ்சையைக் கலக்கிய ரவுடி "கட்டை" ராஜா கைது.. கத்தி, துப்பாக்கியுடன் மதுரையில் சுற்றி வளைப்பு!
தஞ்சாவூர்: தஞ்சையைக் கலக்கி வந்த பிரபல ரவுடியான கட்டைராஜா போலீசாரால் சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சைமாவட்டம் ஆலங்குடியில் உள்ள ரவுடி கட்டைராஜா, 2013 முதல் தலைமறைவாக இருந்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று மதுரை சமயநல்லூரில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறது போலீஸ்.
தனிப்படை ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழு கட்டைராஜாவை கைது செய்தது. கட்டைராஜா மீது 9 கொலைவழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது.
கட்டை ராஜா மீது 9 கொலை உள்பட 14 வழக்குகள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.