5 நாள் தொடர் விடுமுறை எதிரொலி – டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க புதிய இலக்கு
நெல்லை: பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் மது விற்பனை ரூபாய் 400 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை இருக்கிறது. இதனால் இந்த நாட்களில் நாள் ஒன்றுக்கு ரூபாய் 65 கோடி முதல் ரூபாய் 70 கோடி அளவுக்கு மது விற்பனை இருக்கும்.
விடுமுறை நாட்களில் இந்த அளவு சுமார் ரூபாய் 5 கோடியில் இருந்து ரூபாய் 10 கோடியாக உயரும். பண்டிகை நாட்களில் மேலும் உயர்ந்து ரூபாய் 100 கோடி வரை செல்லும். கடந்த 2 ஆண்டுகளாக டாஸ்மாக் பார்களில் அதிக அளவில் போலி மது விற்பனை செய்யப்படுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன.

இதனால் டாஸமாக் மது விற்பனை குறைய தொடங்கியது. பண்டிகை நாட்களில் ஒரு மடங்கு கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபானங்களின் அளவு 50 சதவீதமாக குறைந்தது.
கடந்த தீபாவளியின் போதும், புத்தாண்டு கொண்டாடத்தின் போதும் கடந்த ஆண்டை விட பாதிஅளவுக்குதான் விற்பனை இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து டாஸ்மாக் உயர் அதிகாரிகள், கலால் உயர் அதிகாரிகள், போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
பல்வேறு இடங்களில் போலி மதுபான தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையை சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போலி மதுபான விற்பனையை கட்டுபடுத்தும் பொருட்டு போலீசார் மறறும் கலால் பிரிவினர் கடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பே விற்பனையைக்கு தேவையான சரக்குகளை டாஸ்மாக் கடைகளில் நிரப்பப்பட்டுள்ளது. இன்று காணும் பொங்கல் என்பதால் டாஸ்மாக் விற்பனை கூடுதலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த 5 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலியாக ரூபாய் 400 கோடி அளவுக்கு டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications