டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டும் மண்டல அலுவலர் - நெல்லை கலெக்டரிடம் புகார்
டாஸ்மாக் ஊழியர்களை மண்டல அலுவலர் மிரட்டி வருவதாக கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் என மண்டல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நெல்லை: டாஸ்மாக் ஊழியர்கள் எந்த முறைகேடும் செய்யாத போதே முறைகேடு செய்தது போல் மண்டல அலுவலர் கையெழுத்து வாங்கி சென்றதாக ஊழியர்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். தங்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர் டாஸ்மாக் கடையில் மதுரை மண்டல டாஸ்மாக் பறக்கும் படை அதிகாரி சிவசங்கரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பண கையிருப்பு குறைவு ஏற்பட்டதை அடுத்து ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் அந்த பணத்தை செலுத்தியுள்ளனர். இதற்கிடையே அதே பறக்கும்படை அதிகாரி சென்று விட்டு 1 மணி நேரம் கழித்து மீ்ண்டும் வந்துள்ளார். ஆய்வில் எந்தவித முறைகேடும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் ஊழியர்களை மிரட்டி எந்த ஒரு முறைகேடும் நடக்காத கடை மீது பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி விற்பனையாளர்களாகிய நாங்கள் முறைகேடு செய்தது போல் அவர் நடவடிக்கை மேற்கொண்டார்.
இதனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணிக்கு பாதுகாப்பு வேண்டும். சட்ட விரோத செயலில் ஈடுபட்ட பறக்கும் படை அலுவலர் சங்கரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட மேலாளர் ஐயப்பன் என்பவர் கூறுகையில், "ஊழியர்கள் அனுப்பிய புகார் மனு எனக்கும் வந்துள்ளது. கடந்த சில தினங்களாக சென்னை மாநில அலுவலகத்திற்கு மீட்டிங்கு சென்றதால் விசாரிக்க முடியவில்லை. இதுகுறித்து இன்று விசாரணை நடத்தப்படும்". இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications