நிற்க முடியாமல் விழுந்து, தவழ்ந்து, மண்ணில் புரண்டு.. ஒரு 'குடிகாரர்' படும் அவலத்தைப பாருங்கள்..!!
கரூர்: குடியின் கொடுமை நாளுக்கு நாள் சமூகத்தை அரித்து சல்லடையாக்கி வருகிறது. யாருமே இதன் கொடூரத்தை உணராமல் உள்ளனர். குடிப்பது ஒரு ஸ்டேட்டஸ் என்று சிலர் கருதிய காலம் போய் இப்போது மரியாதை கெட்டு, மானம் போய் நடுத் தெருவில், சாலையில், மண்ணில் புரண்டு பன்றிக்கு சமமான நிலைக்கு மனிதன் போகும அளவுக்கு கேவலமாகியுள்ளது.
யார்தான் குடிப்பது என்று விவஸ்தையே இப்போது இல்லை. பள்ளி போகும் மாணவர்கள் முதல் பல் போனவர்கள் வரை குடித்துக் குடித்து அழிய ஆரம்பித்துள்ளனர்.
மொடாக்குடி, புத்தியைக் கெடுத்து, மானத்தைக் கெடுத்து, சமூக அந்தஸ்தைக் கெடுத்து அழிவில்தான் கொணடு போய் விடும் என்பதை குடிப்பவர்கள் மறந்து விடுவதுதான் வேதனை.

குடியைக் கெடுக்கும் குடி
குடிப் பழக்கம் குடிப்பவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்து விடுகிறது என்பதை நாம் தினசரி பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். குடிகார கணவர்களைக் கட்டிக் கொண்டு எத்தனை பெண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதை கதை கதையாக படித்துக் கொண்டுதான் உள்ளோம். ஆனால் குடிப்பழக்கத்தை பலர் கைவிடுவதாக இல்லை.

மாணவர்களையும் பாதித்த குடி
இப்போது பள்ளி மாணவர்களும் கூட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

கரூர் அவலம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் வாத்து கறிக்கடைக்கு பஞ்சமில்லை. அந்த் கடைக்கு சாப்பிட வந்த சில பள்ளி மாணவர்கள் ஜாலியாக அமர்ந்து பீர் சாப்பிட்ட காட்சி பதற வைத்தது.

கோடை விடுமுறைக்கு பீர் விருந்து
கோடை விடுமுறை விட்டு விட்டதால், இந்த மாணவர்ள் வாத்து கறிக்கடையில் கோடைக்கு இதமாக ஹாயாக பீர் குடித்தது பார்ப்பவர்களை அதிர வைத்தது.

மாணவர்களுக்கு மது விற்காதீர்கள்...ப்ளீஸ்
இனிமேலாவது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டாயமாக மது விற்பதில்லை என்ற முடிவை அரசு எடுத்தாக வேண்டும். வளரும் நிலையிலேயே இவர்கள் தறி கெட்டுப் போவதன் மூலம் அப்பாவி பெற்றோர்களின் சாபத்தைத்தான் அரசு வாங்கிக் கட்டிக் கொள்கிறது.

விலங்கினும் கீழாக..
இதோ இந்தக் காட்சியைப் பாருங்கள். ஒரு மனிதன் விலங்கை விட கீழான நிலைக்குப் போய் விட்டான்.. இந்த கேடு கெட்ட குடியால்.

எழ முடியாமல்
போதையில் தடுமாறி கீழே விழுந்து எழ முடியாமல் தவிக்கும் அகோரம்....

தவழ்ந்து உருண்டு.. விழுந்து...
எழ முடிந்து முடியாமல் கீழே விழுந்து பின்னர் குழந்தை போல தவழ்ந்து, ஊரெல்லாம் கூடி வேடிக்கை பார்த்தாலும் உள்ளே போன அந்த மது அரக்கன் இந்த மனிதனை வெட்கத்தை உதறிப் போடச் செய்து விட்டது கொடுமைதான்....
எப்போது திருந்தப் போகிறார்களோ இந்த மொடாக் குடிகாரர்கள்.!
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications