நிற்க முடியாமல் விழுந்து, தவழ்ந்து, மண்ணில் புரண்டு.. ஒரு 'குடிகாரர்' படும் அவலத்தைப பாருங்கள்..!!
கரூர்: குடியின் கொடுமை நாளுக்கு நாள் சமூகத்தை அரித்து சல்லடையாக்கி வருகிறது. யாருமே இதன் கொடூரத்தை உணராமல் உள்ளனர். குடிப்பது ஒரு ஸ்டேட்டஸ் என்று சிலர் கருதிய காலம் போய் இப்போது மரியாதை கெட்டு, மானம் போய் நடுத் தெருவில், சாலையில், மண்ணில் புரண்டு பன்றிக்கு சமமான நிலைக்கு மனிதன் போகும அளவுக்கு கேவலமாகியுள்ளது.
யார்தான் குடிப்பது என்று விவஸ்தையே இப்போது இல்லை. பள்ளி போகும் மாணவர்கள் முதல் பல் போனவர்கள் வரை குடித்துக் குடித்து அழிய ஆரம்பித்துள்ளனர்.
மொடாக்குடி, புத்தியைக் கெடுத்து, மானத்தைக் கெடுத்து, சமூக அந்தஸ்தைக் கெடுத்து அழிவில்தான் கொணடு போய் விடும் என்பதை குடிப்பவர்கள் மறந்து விடுவதுதான் வேதனை.

குடியைக் கெடுக்கும் குடி
குடிப் பழக்கம் குடிப்பவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் சார்ந்த குடும்பங்களையும் பெரும் சோகத்தில் மூழ்கடித்து விடுகிறது என்பதை நாம் தினசரி பார்த்துக் கொண்டுதான் உள்ளோம். குடிகார கணவர்களைக் கட்டிக் கொண்டு எத்தனை பெண்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பதை கதை கதையாக படித்துக் கொண்டுதான் உள்ளோம். ஆனால் குடிப்பழக்கத்தை பலர் கைவிடுவதாக இல்லை.

மாணவர்களையும் பாதித்த குடி
இப்போது பள்ளி மாணவர்களும் கூட குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

கரூர் அவலம்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் வாத்து கறிக்கடைக்கு பஞ்சமில்லை. அந்த் கடைக்கு சாப்பிட வந்த சில பள்ளி மாணவர்கள் ஜாலியாக அமர்ந்து பீர் சாப்பிட்ட காட்சி பதற வைத்தது.

கோடை விடுமுறைக்கு பீர் விருந்து
கோடை விடுமுறை விட்டு விட்டதால், இந்த மாணவர்ள் வாத்து கறிக்கடையில் கோடைக்கு இதமாக ஹாயாக பீர் குடித்தது பார்ப்பவர்களை அதிர வைத்தது.

மாணவர்களுக்கு மது விற்காதீர்கள்...ப்ளீஸ்
இனிமேலாவது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கட்டாயமாக மது விற்பதில்லை என்ற முடிவை அரசு எடுத்தாக வேண்டும். வளரும் நிலையிலேயே இவர்கள் தறி கெட்டுப் போவதன் மூலம் அப்பாவி பெற்றோர்களின் சாபத்தைத்தான் அரசு வாங்கிக் கட்டிக் கொள்கிறது.

விலங்கினும் கீழாக..
இதோ இந்தக் காட்சியைப் பாருங்கள். ஒரு மனிதன் விலங்கை விட கீழான நிலைக்குப் போய் விட்டான்.. இந்த கேடு கெட்ட குடியால்.

எழ முடியாமல்
போதையில் தடுமாறி கீழே விழுந்து எழ முடியாமல் தவிக்கும் அகோரம்....

தவழ்ந்து உருண்டு.. விழுந்து...
எழ முடிந்து முடியாமல் கீழே விழுந்து பின்னர் குழந்தை போல தவழ்ந்து, ஊரெல்லாம் கூடி வேடிக்கை பார்த்தாலும் உள்ளே போன அந்த மது அரக்கன் இந்த மனிதனை வெட்கத்தை உதறிப் போடச் செய்து விட்டது கொடுமைதான்....
எப்போது திருந்தப் போகிறார்களோ இந்த மொடாக் குடிகாரர்கள்.!
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications