தமிழகம் முழுவதும் தெருத் தெருவாக அலையும் டாஸ்மாக் ஊழியர்கள்... எதற்காக?
நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அதற்கு மாற்றாக ஊருக்குள் வேறு இடத்தை தேடி டாஸ்மாக் ஊழியர்கள் தெரு தெருவாக அலைந்து வருகின்றனர்.
சென்னை: நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் அதற்கு மாற்றாக வேறு இடத்தைத் தேட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால் ஊழியர்கள் தெரு தெருவாக அலைந்து வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக் கடைகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுவதால் பெரும் விபத்துகள் நிகழ்வதாக கூறி நெடுஞ்சாலைகளிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்பட்ட மதுபானக் கடைகளை மார்ச் 31-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி தமிழக நெடுஞ்சாலைகளில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில் அக்கடைகளின் ஊழியர்கள் தங்களுக்கு மாற்று பணிகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் போராட்டம்...
ஆனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்களைச் சுற்றியுள்ள கடைகளை மூடவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிலர் கடைகளின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

கடைகள் மூடல்
குடிமகன்கள் குடித்து விட்டு அங்கேயே அலங்கோலமாக படுத்துக் கிடப்பது அருவருப்பாக உள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளை கடந்து செல்லவே பெண்களும், சிறுமிகளும் அஞ்சுகின்றனர் என்பதாலும் கடைகளை மூட வேண்டும் என்றும் மக்கள் கோருகின்றனர். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் இடங்களில் உள்ள கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

அதிகாரிகளிடம் முறையீடு
இப்படிக் கடைகள் மூடப்படுவதால், அக்கடை ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தங்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட டாஸ்மாக் தலைமையகங்களில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்று இடம் தேடுங்கப்பா
அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள், சில நாள்கள் பொறுத்திருக்கும்படியும், அதற்குள் மூடப்பட்ட கடைகளுக்கு மாற்று இடங்களை தேடக் கோரியும் உத்தரவிட்டனர்.

கிலியில் ஊழியர்கள்
மூடப்பட்ட அனைத்து கடைகளிலும் சரக்குகள் அப்படியே கிடப்பதால் போதை தலைக்கேறி கடையை உடைத்து சரக்குகளை திருடி விட்டால் அதற்கும் தாம்தான் பதில் சொல்ல வேண்டுமே என்ற கிலியில் ஊழியர்கள் மாற்றுக் கடைகளுக்கு அலைந்து கொண்டிருக்கின்றனர்.

ஊருக்குள்ளும் பிரச்சினை வந்தால்!
மேலும் ஊருக்குள் கடைகள் வைத்தாலும் மறுபடியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இந்த கடைகளையும் மூடவைத்து விட்டால் தங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன செய்வது என்று கையை பிசைந்து கொண்டு நிற்கின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications