நரேந்திர மோடியின் கொடும்பாவியைக் கொளுத்திய தமிழ் தேசிய பேரியக்கம்...!
திருச்சி: தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பினர் திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் கொடும்பாவியைக் கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் 4 வார காலத்திற்க்குள் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு முதலில் சம்மதித்த மத்திய அரசு பின்னர் கர்நாடகத்தின் நிர்ப்பந்தத்திற்குப் பலியாகி தமிழகத்திற்கு எதிராக திரும்பி விட்டது.

இது தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜகவும் இந்த விவகாரத்தில் மத்திய அரசை இதுவரை பகிரங்கமாக கண்டிக்கவில்லை. மத்திய அரசின் இந்த தடைக்கு தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய சங்கங்களும், எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மத்திய அரசை கண்டித்து பல்வேறு வகையில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
அந்த வகையில் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழ்தேசிய பேரியக்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கம், உழவர் உழைப்பாளர் கட்சி, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது பிரதமர் மோடியின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது.
பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டோர் குரல் எழுப்பினர். இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து கொடும்பாவியை அணைத்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தப் போராட்டம் காரணமாக பஸ் நிலையமே பரபரப்பாக காணப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications