ஒரு சில நிமிடங்களில் 10 பேர் தோல் கழிவுநீரில் மூழ்கிய பரிதாபம்.. உயிர் தப்பியவரின் அதிர்ச்சி தகவல்!
வேலூர்: ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீர் தொட்டி உடைந்த ஒரு சில நிமிடங்களிலேயே 10 பேர் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக உயிர் தப்பிய ரவி கூறியுள்ளார்.
ராணிப்பேட்டை சிப்காட்டில் தோல் கழிவுநீரில் மூழ்கி 10 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் உயிர் தப்பிய ரவி இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவராக இருக்கிறார்.

கழிவுநீர் தொட்டி உடைந்த விபத்தில் இருந்து தப்பியது குறித்து ரவி கூறியதாவது:
நள்ளிரவு 12.30 மணியளவில் டேங்க் உடைந்த சத்தம் கேட்டு கண் விழித்து சுதாரித்த நான் அங்கிருந்த சுவரில் ஏறி நின்று விட்டேன்.
இதனால் என்னால் தப்பிக்க முடிந்தது. துர் நாற்றத்துடன் விஷவாயு பரவியது. நான் சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டேன்.
மற்ற தொழிலாளர்களை காப்பாற்ற சத்தம் போட்டேன். ஒரு சில நிமிடங்களில் கழிவுநீர் தூங்கி கொண்டிருந்த தொழிலாளர்களை மூழ்கடித்து விட்டது.
இன்னும் அந்த பதற்றம் என்னை விட்டு அகலவில்லை. இதுபோன்ற விபத்துகள் இனிமேல் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ரவி கூறினார்.
மறியல்
இதனிடையே இந்த சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி ராணிப்பேட்டை காவல்நிலையம் முன்பாக இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Ten factory workers were killed after a wall of an industrial plant collapsed on them at Vaniyambadi in Vellore district in Tamil Nadu's Vellore district on Saturday.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications