Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்- நட்சத்திர ஹோட்டலில் மர்ம பார்சல்... வெடிகுண்டு புரளியால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சேத்துப்பட்டு வணிக வளாகம் மற்றும் நட்சத்திர ஹோட்டலில் கிடந்த மர்ம பார்சல் மற்றும் கடிதத்தால், வெடிகுண்டு புரளி ஏற்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ளது ஷாப்பர்ஸ் ஸ்டாப் என்ற பிரபல வணிக வளாகம். 7 மாடிகளை கொண்ட இந்த வணிக வளாகத்தின் தரைதளத்தில் கழிவறை அருகே நேற்று சிறிய மர்ம பார்சல் ஒன்று கிடந்தது. அதற்குள் அலாரம் அடிக்கும் 2 கடிகாரங்கள் இருந்தன.

Tension after bomb threat in Chennai

அந்தப் பார்சலைக் கண்டெடுத்த காவலாளி கதிரேசன் என்பவர், அதற்குள் இருந்து வந்த சத்தத்தால் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

விரைந்து வந்த உதவி கமிஷனர் மோகன்தாஸ், இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் மர்ம பார்சலை எடுத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். மோப்பநாயுடன் வந்த வெடிகுண்டு நிபுணர்கள் பார்சலை சோதித்துப் பார்த்தனர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை.

இதற்கிடையே, மர்ம பார்சல் கிடைத்ததைத் தொடர்ந்து வணிக வளாகத்தின் 7 மாடிகளிலும் இருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் அங்கும் சோதனைகள் நடத்தப்பட்டது. அதிலும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

ஆனால் பார்சலுக்குள் கடிதம் ஒன்று இருப்பதை போலீசார் கண்டனர். அதில், ‘தமிழக சிறைகளில் கைதிகள் தாக்கப்படுகிறார்கள். கைதிகளுக்கு வழங்கப்படும் உணவில் கூட மோசடி நடக்கிறது. உதாரணத்திற்கு கோழிக்கறி குழம்பு கைதிகளுக்கு சரியாக வழங்கப்படுவதில்லை. பணம் கொடுக்கும் கைதிகளுக்கு மட்டுமே கோழிக்கறி குழம்புடன் சாப்பாடு கொடுக்கிறார்கள்.

பணம் கொடுக்காத கைதிகளுக்கு, கோழிக்காலை மட்டுமே கொடுக்கிறார்கள். அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் நிறைந்து விட்டது. மாநகராட்சி ஊழியர்கள் குப்பை அள்ளுவதில் கூட லஞ்சம் தலை விரித்தாடுகிறது. இது போன்ற அராஜகம் தடுக்கப்பட வேண்டும்' என்ற வாசகங்கள் காணப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், சென்னை புழல் உள்ளிட்ட 6 மத்திய சிறைகளுக்கு தீவிரவாதி பின்லேடன் படத்துடன் எழுதப்பட்ட மர்ம மிரட்டல் கடிதம் வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சிறைக்கைதிகளின் நலன் குறித்து எழுதப்பட்ட இந்தக் கடிதத்திற்கும், அதற்கும் சம்பந்தம் இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நட்சத்திர ஹோட்டலுக்கும் மிரட்டல்:

இதேபோன்று அலார கடிகார பார்சல் மற்றும் மர்ம கடிதம் சேத்துப்பட்டில் உள்ள ஹாரிசன் நட்சத்திர ஓட்டலிலும் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பார்சலை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் பாண்டியன் தலைமையில் போலீசார் எடுத்துச்சென்று சோதனை நடத்தினர். அங்கும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை போட்டனர்.

சமீபத்தில் இதுபோன்ற அலார கடிகார பார்சல் மற்றும் கைதி எழுதிய கடிதம் சென்னை ஹைகோர்ட் வளாகத்திலும் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து இவ்வாறு அலார கடிகார பார்சல் மற்றும் கடிதங்கள் கிடைத்து வருவது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+