வேலூரில் இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு- மறியல், தடியடி
வேலூர்: வேலூரில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் வீடு மற்றும் மாவட்ட துணைத் தலைவரின் பேருந்து மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.
வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் இந்து முன்னணி வேலூர் கோட்டத் தலைவர். நேற்று அதிகாலை மகேஷ் தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, அவரது வீட்டின் வெளியே சத்தம் கேட்டது. இதையடுத்து, மகேஷ் வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் வராண்டா வில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோல் நிரப்பிய பிளாஸ்டிக் கவர்கள் வீசப்பட்டிருந்தன.

இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு மகேஷ் தகவல் கொடுத்தார். உடனே, போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். இதில், பிளாஸ்டிக் கவரில் நிரப்பப்பட்ட பெட்ரோல் பாக்கெட்கள் வீட்டின் வராண்டாவிலும், 3 பெட்ரோல் குண்டுகள் வீட்டின் கூரை மீதும் வீசப்பட்டு இருந்ததை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தகவலறிந்த வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஜய் சீனிவாசன், வேலூர் தடயவியல் உதவி இயக்குநர் பாரி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதேபோல், இந்து முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் டி.கே.டி.சீனிவாசனுக்கு சொந்தமான பேருந்து வேலூர் டி.கே.எம். கல்லூரி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் மீதும் நேற்று காலை மர்ம நபர்கள் பிளாஸ்டிக் பெட்ரோல் கவர்களை வீசி, பேருந்துக்கு தீ வைத்துள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதியினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் பேருந்து இருக்கைகள் சேதமடைந்தன.
இந்த சம்பவத்தைக் கண்டித்து, இந்து முன்னணியினர் சத்துவாச்சாரியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு வந்தனர். அப்போது, இந்து முன்னணியினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்து, பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் பெங்களுரூ- சென்னை நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட் டத்தைக் கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோல், ஆற்காடு, வாலாஜா, குடியாத்தம், ஆம்பூர், திருவண்ணாமலை, வந்தவாசி ஆகிய பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்து முன்னணி நிர்வாகிகள் வீடு, பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications