பணிமனை முன் போராட முயற்சி... மதுரையில் ஊழியர்கள், போலீசிடையே தள்ளுமுள்ளு!
மதுரையில் பணிமனை முன்பு போராட்டம் நடத்த முயன்ற போது போக்குவரத்து ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
Recommended Video

மதுரை : ஊதிய உயர்வு, பிடித்தம் செய்த பணத்தை திரும்பத் தர வலியுறுத்தி மதுரையில் பணிமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட முயன்ற போக்குவரத்து ஊழியர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அடிப்படை ஊதியம், தர ஊதியத்தோடு 2.57 காரணி ஊதிய உயர்வு கோரி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசு 2.44 காரணிக்கு மேல் ஊதிய உயர்வு தர முடியாது என்று விடாப்பிடியாக இருப்பதோடு, நீதிமன்ற தீர்ப்பை காட்டி போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிமனைகள் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரையிலும் பணிமனை முன்பு போராட்டம் நடத்த போக்குவரத்துத் தொழிலாளர்கள முயற்சித்தனர்.
சுமார் 100க்கும் மேற்பட்டோர் கூடி போராடி முடிவு செய்திருந்த நிலையில் அங்கு திரண்ட தொழிலாளர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயற்சித்தனர். இதனால் இரண்டு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரைக்கும் நிலைமை மோசமானதால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications