Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொட்டும் மழையில் உடல்கள் தகனம்! குன்னூர் விபத்தில் பலியானவர்களுக்கு இரவோடு இரவாக நடந்த இறுதிச்சடங்கு

Subscribe to Oneindia Tamil

தென்காசி: குன்னூர் மலைப்பகுதியில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் கொட்டும் மழையிலும் இரவோடு இரவாக தகனம் செய்யப்பட்டிருக்கிறது.

தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் ஆண்டுதோறும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்தவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்காக ஆண்டு தொடக்கத்திலேயே நிதி சேகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல திட்டமிட்டபடி இந்த ஆண்டு, 28ம் தேதி இரவு கடையத்திலிருந்து 54 பேரை தன்னுடன் சுற்றுலாவுக்குப் அழைத்து சென்றிருக்கிறார். கடையத்திலிருந்து புறப்பட்ட பேருந்து கேரள மாநிலம் கொச்சி, அங்கிருந்து ஊட்டி சென்று, கடந்த 30ம் தேதி அதாவது சனிக்கிழமை மாலை கோயம்புத்தூருக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

The bodies of those who died in the Coonoor bus overturn accident were cremated in the rain

அப்போது, குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம் பகுதி 9வது கொண்டை ஊசி வளைவில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளது. இதில், பேருந்தில் பயணம் செய்தவர்களில் கடையம் ராமநதி அணைச் சாலையைச் சேர்ந்த சண்முகையா மனைவி பேபிகலா (36). தெற்குக் கடையம் கருப்பசாமி மனைவி தங்கம் (45), கடையம், பாரதிநகர் முருகன் மனைவி ஜெயா (60). ஆழ்வார்குறிச்சி சேனையர் தெரு பண்டாரம் மனைவி முப்பிடாதி (65).வேளார் தெரு சண்முகம் மகன் முருகேசன் (65),கீழக்கடையம் பிச்சைமுத்து மகன் இளங்கோ (64). அவரது மகளும், ராம் என்பவரின் மனைவியுமான கௌசல்யா (29), விக்கிரமசிங்கபுரம் பகுதி அகஸ்தியர்புரத்தைச் சேர்ந்த விஜய் சுப்பிரமணி மகன் நித்தின்கண்ணா (15), சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த அன்பு மனைவி பத்மா ராணி உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

The bodies of those who died in the Coonoor bus overturn accident were cremated in the rain

அதேபோல காயமடைந்தவர்கள் உதகை அரசு மருத்துவமனையிலும், கோவை அரசு மருத்துவமனையிலும் சிக்கிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிந்த குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவியை அறிவித்துள்ளன. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு தகணம்/நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடையம் பகுதியில் கொட்டும் மழையிலும் 5 பேர் உடல்கள் தகனமும், ஒருவர் உடல் அடக்கமும் செய்யப்பட்டன. ஒரே பகுதியை சேர்ந்த 9 பேர் உயிரிழந்திருப்பது தென்காசி மாவட்டத்தில் பெரும் சோகத்த ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+