For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுகின்றன!முதல்வர் அலுவலக அதிகாரிகள் விலகல் குறித்து ராமதாஸ் கருத்து

முதல்வர் அலுவலக அதிகாரிகள் திடீரென விலகுவது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிசாசுகள் குடியேறுவதற்காக பேய்கள் வெளியேறுவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். முதல்வர் அலுவலக அதிகாரிகள் திடீரென விலகுவதையடுத்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முதல்வர் அலுவலக அதிகாரிகள் பலரும் திடீரென விலகி வருகின்றனர். தமிழக அரசின் சிறப்பு ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் அண்மையில் தனது பதவிலிருந்து விலகினார்.

the demons to settle in ghosts gets out: Ramadas

இந்நிலையில் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி பதவியில் இருந்த சாந்த ஷீலா நாயரும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுபோல் முதல்வர் அலுவலக அதிகாரிகளும் உளவுத்துறை அதிகாரிகளும் திடீரென பதவி விலகி வருவதும் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பிசாசுகள் குடியேற பேய்கள் வெளியேறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் மன்னார்குடி கும்பலை பிசாசுகள் என கூறி ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

English summary
PMK founder Ramadoss said in twitter that the demons to settle in ghosts gets out. He saying like this on CM Office officials sudden resignation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X