ஸ்டெர்லைட் பற்றிய மக்கள் பேச்சை அரசு கேட்கவில்லை.. கமல்ஹாசன் கோபம்
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் பேச்சை அரசு கேட்கவில்லை என்று கமல்ஹாசன் தூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் பேச்சை அரசு கேட்கவில்லை என்று கமல்ஹாசன் தூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் போராட்ட களத்தில் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசன் இன்று தூத்துக்குடி சென்றார்.

அவர் தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் கமல்ஹாசன் பேட்டி அளித்தார். ஸ்டெர்லைட் போராட்டத்தில் என்றும் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்று குறிப்பிட்டார்.
அதில் ''ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்கள் பேச்சை அரசு கேட்கவில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை, மத்தியில் இருப்போருக்கு கேட்கவேண்டும்.'' என்றார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் கமல்ஹாசன் #KamalHaasan #SterliteProtest #Sterlite pic.twitter.com/NglW7pUwqJ
— Oneindia Tamil (@thatsTamil) April 1, 2018
மேலும் ''மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத எந்த தொழிலும் தேவையில்லை. ஸ்டெர்லைட் குற்றத்தை அரசு கண்டிக்கவில்லை என்றால் மக்கள் செய்வார்கள்.'' என்றும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications