சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு!
சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி: சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசியில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் சமூக மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் காஜா முஹைதீன் தலைமை தாங்கினார்.

மனித நேய ஜனநாயக கட்சி மேற்கு மாவட்ட பொருளாளர் செய்து அலி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் ஹாரூன் ரசீது கலந்து கொண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு ஒரு தீர்மானத்தை சட்டசபையிலும், அமைச்சரவையிலும் கொண்டுவரவேண்டும். இன்று வரை ஸ்டெர்லைட் எதிராக போராடிய மக்கள் கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த கைது நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். போராடிய மக்கள் மீது மேலும் மேலும் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்வது சரியான செயலாக இருக்க முடியாது.
நீட் தேர்வை தமிழில் எழுதிய தமிழக மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 49 வினாக்கள் மொழிமாற்றம் செய்யப்படும் போது தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக அதற்கான மதிப்பெண்களை வழங்குவதற்கு அரசு உடனடியாக முயற்சி செய்ய வேண்டும். அந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கிடும் விதமாக அமைந்து விடக் கூடாது. உடனடியாக அந்த மாணவர்களுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
அரசு ஊழியர்கள் ஆசிரியருடைய அமைப்பான ஜாக்டோ ஜியோ தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இன்றைய தினம் பேரணியாக புறப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலனை செய்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் சாதீர், இந்திய யூனியன் முஸ்லீம் லீம் மாநில துணை செயலாளர் வி.டி.எஸ்.ஆர் முகமது இஸ்மாயில், நெல்லை மாவட்ட சிறுபாண்மை மக்கள் நலக்குழு உறுப்பினர் பால்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் துப்பாக்கி பாண்டியன், எஸ்.டி.பி.ஐ , நகர தலைவர் செய்து மஹுமுது, மாநில துணை செயலாளர் செய்து அலி, மாநில செயற்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது உட்பட மாநில, மாவட்ட மற்றும் நகர உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications