அரசுக்கு சம்மட்டி அடி: சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி
சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
Recommended Video

சென்னை: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
சிலைக்கடத்தல் வழக்கில் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை திருப்தியளிக்கவில்லை என்று கூறிய தமிழக அரசு, சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணையும் பிறப்பித்தது. சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிபிஐக்கு மாற்ற எதிர்ப்பு
இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உயர் அதிகாரிகளை காப்பாற்ற
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயரதிகாரிகளை காப்பாற்றும் நோக்கில் தமிழக அரசு சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியுள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபிஐக்கு மாற்ற இடைக்காலத்தடை
சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் தமிழக அரசின் அரசாணைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.

ஒரு நிமிடம் கூட அனுமதிக்க முடியாது
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரிக்க ஒரே நாளில் உத்தரவிட்டது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.மேலும் ஒரு நிமிடம் கூட தமிழக அரசின் அரசாணை அமலில் இருக்க அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு
சிலைக் கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications