சென்னையில் மெட்ரோ சுரங்க ரயிலுக்கான தொடக்க விழா.. வெங்கையா நாயுடு, எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு!
சென்னையில் நடைபெறும் மெட்ரோ சுரங்க ரயிலுக்கான தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை: மெட்ரோ சுரங்க ரயிலுக்கான தொடக்க விழா நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை கோயம்பேடு - நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை இன்று தொடங்குகிறது. இதனை முதல்வர் எடப்பாடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள்.

சென்னையில் கோயம்பேட்டில் இருந்து பரங்கிமலை வரையும், விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையும் உயர்த்தப்பட்ட பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயம்பேடு அடுத்த திருமங்கலத்தில் இருந்து அண்ணாநகர், கீழ்ப்பாக்கம் வழியாக நேரு பூங்கா வரை 7.4 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ பயணிகள் ரயில் இன்று தொடங்குகிறது.
இதற்கான விழா திருமங்கலம் ரயில் நிலையத்தில், நடைபெற்று வருகிறது. முதலில், திருமங்கலம் உள்ளிட்ட 7 சுரங்க ரயில் நிலையங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியும், இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோர் கொடியசைத்து, தொடங்கி வைக்கிறார்கள். விழாவில் மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications