மக்கள் தலையில் "டிக்கெட் குண்டு".. தூக்கி வீசும் தியேட்டர்கள்.. சாட்டையை வீசுமா அரசு?
திரையரங்குகள் இரட்டை வரிக்கேற்ப கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன.
சென்னை: திரையரங்குகள் இரட்டை வரிக்கேற்ப கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளன. இந்த கட்டண உயர்வு மக்கள் தலையில்தான் விடியும் என்பதால் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேசம் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஜிஎஸ்டியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் திரையரங்குகளுக்கு மட்டும் ஜிஎஸ்டியுடன் கேளிக்கை வரியையும் சேர்த்து இரட்டை வரி முறை விதித்தது.
ஏற்கனவே 100 ரூபாய்க்கு குறைவாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்களுக்கு 28 சதவீதமும் ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவீதம் கேளிக்கை வரியும் சேர்ந்தால் நஷ்டம் தான் ஏற்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஸ்ட்ரைக் வாபஸ்
கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி கடந்த 4 நாட்களாக திரையரங்கு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அரசுடன் பேச்சு வார்த்தை திரையரங்கு வர்த்தக சபை குழுவினர் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

டிக்கெட் விலை உயர்வு
அதேநேரத்தில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இதன்மூலம் நாளை முதல் ஜிஎஸ்டியுடன் சினிமா டிக்கெட் விலை ரூ153.60 வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் கட்டணம்
தங்களின் நஷ்டத்தை சமாளிக்க மொத்த சுமையையும் மக்கள் தலையில் இறக்கி வைக்க தியேட்டர்கள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே கட்டுப்பாடின்றி பார்க்கிங் கட்டணம் மற்றும் ஸ்னாக்ஸ்களுக்கு கன்னாபின்னாவென வசூலிக்கும் திரையரங்குகள் தற்போது டிக்கெட் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது.

நோ ரிலாக்ஸ்
தங்களை பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ள மக்களை இழுத்துவிட்டுள்ளனர் தியேட்டர் உரிமையாளர்கள். இதனால் பொதுமக்கள் தற்போது ரிலாக்ஸ் செய்துகொள்ள தியேட்டருக்கும் போக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

அரசு தலையிடுமா?
மக்களை பாதிக்கும் இப்பிரச்சனையை அரசு கண்டுகொள்ளுமா என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தனியார் மால்களில் பார்க்கிங் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications