ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை.. அவரது வீடு நினைவு இல்லமாக்கப்படும்.. ஆட்சியர் உறுதி!
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது வீடு நான்கு மாதத்தில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது வீடு நான்கு மாதத்தில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவர் வசிக்கும் போயஸ் கார்டன் இல்லத்தை மக்கள் வெளியே இருந்தபடியே பார்க்க பொதுமக்களுக்கு சில நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சசிகலாவுடனான மோதலுக்குப் பிறகு போயஸ்கார்டன் இல்லம் நினைவு இல்லம் ஆக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

மதிப்பிடும் பணி
கடந்த 30 ஆம் தேதி ஜெயலலிதா வீட்டை ஆர்ஜிதம் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றன. இதற்காக சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வீடு முழுவதும் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தனிக்குழு அமைப்பு
ஆர்ஜிதம் செய்வதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி தொடர்பு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

நேரடி வாரிசுகள் இல்லை
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என அவர் தெரிவித்தார். வேதா இல்லத்திற்கு தீபா, தீபக் சொந்தம் கொண்டாடுவது குறித்த கேள்விக்கு ஆட்சியர் இவ்வாறு பதில் கூறினார்.

4 மாதத்தில் நினைவில்லமாக்கப்படும்
ஜெயலலிதாவுக்கு என நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது வீடு நான்கு மாதத்தில் நினைவில்லமாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். இதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.

சீல் வைத்த அறைகள்
வருமான வரி சோதனையால் நினைவு இல்லமாக்கும் பணி பாதிக்காது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் வருமான வரித்துறையினர் சீல் வைத்த அறைகளை தாங்கள் திறக்கவில்லை என்றும் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
-
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications