பாலியல் புகார் கூறிய மாணவியின் அறையில் 2 பக்கமும் தாழ்ப்பாளே இல்லையாம்... விசாரணையில் திடுக்!
Recommended Video

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வேளாண் அரசு கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்த நிலையில் அந்த மாணவியின் அறைக்கு தாழ்ப்பாளே இல்லை என்பது தெரியவந்தது.
திருவண்ணாமலை தண்டராம்பட்டில் உள்ள அரசு வேளாண் கல்லூரியில் சென்னை மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து விடுதி வார்டன்களான மைதிலி மற்றும் புனிதா ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளார்.

மாணவி
எனினும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் மாணவியை தங்கபாண்டியன் அறைக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதனால் அந்த மாணவி பெற்றோர் மூலம் கல்லூரி முதல்வருக்கு புகார் அளித்தார்.

கல்லூரி முதல்வரிடம்
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி திருவண்ணாமலை மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேற்று கல்லூரிக்கு சென்று மாணவிகள், பேராசிரியர்கள், கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினார்.

5 பேர் குழு
அப்போது மாணவி தங்கியிருந்த விடுதி அறையை பார்வையிட்டார். அப்போது அந்த அறைக்கு உள்தாழ்ப்பாளும் வெளித் தாழ்ப்பாளும் இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து நீதிபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் மாணவி கூறிய புகார்கள் குறித்து விசாரணை நடத்த கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இருந்து 5 பேர் கொண்ட குழு இன்று வாழவச்சனூர் வேளாண் கல்லூரிக்கு விசாரணை நடத்த வருகின்றனர்.

விசாரணை
அந்த குழு மாணவி மற்றும் புகாரில் சிக்கியுள்ள பேராசிரியர் மற்றும் பேராசிரியைகளிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் அடிப்படையில் அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் மனித உரிமை கழகத்தினரும் விசாரணை நடத்த வருகின்றனர் என்றார் மகிழேந்தி.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications