கச்சநத்தம் படுகொலை.. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல்
படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களை சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
சிவகங்கை: கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். ஊர்மக்களின் இன்று 4-வது நாள் தொடர் போராட்டத்திலும் அவர் கலந்துக்கொண்டு சமூக விரோதிகளுக்கு எதிராக உரையாற்றி கண்டனங்களை பதிவு செய்தார்.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் தலித்துக்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்துக் கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்ததுடன், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஆறுதலை வழங்கினார்.
பின்னர், 4-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்திலும் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது தலித்துகள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்ட சமூக விரோதிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உரையாற்றினார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கச்சநத்தம் கிராமத்தில் வெட்டி கொல்லப்பட்ட 3 பேர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயம்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதலுக்கு மாற்றாக கடுமையான சட்டத்தை நிறைவேற்ற மோடி உறுதியளிக்க வேண்டும் என்றார்.
-
நெய்வேலி மண்ணின் மைந்தன் திருமால்வளவன் அந்த வீடியோ! வேல்முருகன் திமுக-பாமக கோட்டை தகர்க்க பிளான் -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications