கச்சநத்தம் படுகொலை.. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல்
படுகொலை செய்யப்பட்ட குடும்பங்களை சந்தித்து திருமாவளவன் ஆறுதல் கூறினார்.
சிவகங்கை: கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆறுதல் கூறினார். ஊர்மக்களின் இன்று 4-வது நாள் தொடர் போராட்டத்திலும் அவர் கலந்துக்கொண்டு சமூக விரோதிகளுக்கு எதிராக உரையாற்றி கண்டனங்களை பதிவு செய்தார்.
சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் ஒரு சமூகத்தினர் தலித்துக்கள் மீது நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதைக் கண்டித்துக் கச்சநத்தம் ஊர்மக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் கடந்த 4 நாட்களாக ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்ததுடன், தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து ஆறுதலை வழங்கினார்.
பின்னர், 4-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கும் போராட்டத்திலும் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது தலித்துகள் மீது தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்பட்ட சமூக விரோதிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் உரையாற்றினார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், கச்சநத்தம் கிராமத்தில் வெட்டி கொல்லப்பட்ட 3 பேர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயம்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதலுக்கு மாற்றாக கடுமையான சட்டத்தை நிறைவேற்ற மோடி உறுதியளிக்க வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications