காக்காய், குருவியை சுட்டால் கூட கேட்க அமைப்புகள் இருக்கு… மீனவர்களை சுட்டால்.. திருமாவளவன் ஆவேசம்
காக்காய், குருவியை சுட்டால் கூட கேட்க அமைப்புகள் இங்கே இருக்கின்றன. ஆனால் மீனவர்களை சுட்டால் கேட்க நாதி இல்லை என்று திருமாவளவன் கடுமையாக கூறியுள்ளார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
பிரிட்ஜோவின் தாய் தந்தையரை பார்த்து ஆறுதல் கூறினோம். துப்பாக்கிக்கு மீனவர்கள் பலியாவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது அட்டூழியங்களை செய்து வரும் சிங்கள இனவெறியர்களை ஒரு முறை கூட கண்டித்து மத்திய அரசு பேசவில்லை. இலங்கை அரசு மீது சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்திய அழுத்தம் தர வேண்டும்.

காக்காய் குருவிகளை சுட்டால் கூட ஏன் என்று கேட்க பல அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் மீனவர்களை சுட்டுக் கொன்றால் அது பற்றி யாரும் வாய்திறந்து பேசுவதில்லை. இது வன்மையான கண்டனத்திற்குரியது. மோடி இங்கு வர வேண்டும். இல்லை என்றால் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வரவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தார்கள். யாராவது ஒருவராவது இந்த 4 நாட்களில் இங்கு வந்து ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ஒருவரும் வரவில்லை. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மத்திய அரசு, தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்து விட வேண்டாம். இந்த நிலை தொடர்ந்தால் இளைஞர்கள் பாடம் புகட்டும்நிலை விரைவில் உருவாகும். எனவே, மத்திய அரசு நல்ல பதிலை அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications