நில அபகரிப்பு வழக்கு: சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!
திருவையாறு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சகோதரர் டிவி சுந்தரவதனத்துக்கு நில அபகரிப்பு வழக்கில் திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் இருக்கும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் ஜனவரி மாதத்தில் தண்டனைக் காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது. வெளியே வந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவரது சகோதார் டி.வி. சுந்தரவதனம். இவர் மீது ஏற்கனவே நில அபகரிப்பு வழக்கு நடந்து வருகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்குச் சொந்தமான 4.8 ஏக்கர் நிலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு சுந்தரவதனம், தன் பெயரில் வலுக்கட்டாயமாக, மாற்றி எழுதிக் கொண்டதாக மனோகரன் புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பான வழக்கு திருவையாறு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுந்தரவதனம் உள்பட 11 பேர் கடந்த 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து சுந்தரவதனம் உள்பட 11 பேருக்கும் திருவையாறு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதுதொடர்பான வழக்கு வரும் அக்டோபர் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications