நில அபகரிப்பு வழக்கு: சசிகலாவின் சகோதரர் சுந்தரவதனத்துக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்!
திருவையாறு: சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் சகோதரர் டிவி சுந்தரவதனத்துக்கு நில அபகரிப்பு வழக்கில் திருவையாறு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
தமிழகத்தின் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் இருக்கும் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் ஜனவரி மாதத்தில் தண்டனைக் காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வரலாம் என்று கூறப்படுகிறது. வெளியே வந்த பின்னர் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இவரது சகோதார் டி.வி. சுந்தரவதனம். இவர் மீது ஏற்கனவே நில அபகரிப்பு வழக்கு நடந்து வருகிறது. தஞ்சாவூரைச் சேர்ந்தவர் மனோகரன். இவருக்குச் சொந்தமான 4.8 ஏக்கர் நிலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு சுந்தரவதனம், தன் பெயரில் வலுக்கட்டாயமாக, மாற்றி எழுதிக் கொண்டதாக மனோகரன் புகார் அளித்து இருந்தார்.
இது தொடர்பான வழக்கு திருவையாறு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுந்தரவதனம் உள்பட 11 பேர் கடந்த 7ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இவர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து சுந்தரவதனம் உள்பட 11 பேருக்கும் திருவையாறு நீதிமன்ற நீதிபதி மணிகண்டன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இதுதொடர்பான வழக்கு வரும் அக்டோபர் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications