காந்திஜெயந்தியன்று அதிக விலைக்கு திருட்டுத்தனமாக மது விற்பனை: திருவள்ளூரில் 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: காந்தி ஜெயந்தியான நேற்று திருட்டுத்தனமாக மது விற்ற குற்றத்திற்காக இருவரை திருவள்ளூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி உள்ளிட்ட தினங்களில் மது விற்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனபோதும், சிலர் திருட்டுத்தனமாக ஆங்காங்கே மதுவை விற்பதும் நடப்பதுண்டு.
அந்தவகையில், நேற்று திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை ரயில் நிலையம் அருகே கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த அதேபகுதியைச் சேர்ந்த சுதாகரை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே மதுவிற்ற திருநின்றவூரை அடுத்த நட்சியர் சத்திரத்தை சேர்ந்த மூர்த்தியைப் போலீசார் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 56 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்ய போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் காவலில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications