திருவாரூரில் சிக்கிய தவெக நிர்வாகி! பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணுக்கு.. பாலியல் தொல்லை!
திருவாரூர்: பஸ் ஸ்டாண்டில் நின்ற இளம்பெண்ணை பாலியல் சீண்டல் செய்ததாக, தவெக நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இன்று காலை சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக நிர்வாகிகள் குற்றங்களில் ஈடுபடுவதாக விமர்சித்திருந்தார். இதைனயடுத்து ஒரு சில மணி நேரங்களிலேயே தவெகவினர் 2 பேர் கைது செய்யப்பட்டிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ஆவர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

என்ன நடந்தது?
நேற்றிரவு திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில், 27 வயது இளம்பெண் ஒருவர் தனது தந்தை வருவதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த திருத்துறைப்பூண்டி ஆலத்தம்பாடி அருகே வசித்து வந்த, ஆனந்த் மற்றும் அவருடைய நண்பர் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த இளம்பெண்ணின் தந்தை, ஆனந்த் மற்றும் அவருடைய நண்பரின் பைக் சாவியை பிடிங்கிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் பேரில் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்திருக்கின்றனர். இதில் ஆனந்த என்பவர் தவெகவின் திருத்துறைப்பூண்டி ஒன்றிய செயலாளராக இருந்திருக்கிறார். இவர் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் கட்சி தலைமை விடுவித்திருக்கிறது.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இன்று காலை சட்டமன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சியில் வேலியே பயிரை மேய்கிறது என்றும், தவெக நிர்வாகிகள்தான் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும் விமர்சித்திருந்தார். இந்நிலையில் தற்போது தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications