திருச்செங்கோடு: படிக்கட்டில் பயணித்த 3 மாணவர்கள் ஆட்டோ மீது மோதி பலி

Subscribe to Oneindia Tamil

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Three students on footboard fall to death

ஈரோட்டில் இருந்து திருச்சி வந்த பஸ்சில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் 3 மாணவர்கள் படியில் தொங்கிக் கொண்டே பயணம் செய்தனர். பஸ்,

Three students on footboard fall to death

பள்ளிப்பாளையம் அருகில் உள்ள ஐந்துபனை என்ற இடத்தில் வந்தபோது, சாலை ஓரத்தில் நின்றிந்த ஆட்டோவை உரசிக் கொண்டு சென்றது. அப்போது, படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்த, தமிழ்ச்செல்வன், சரவணக்குமார், பிரேம்குமார், மூன்று மாணவர்களும் ஆட்டோ மீது மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Three students on footboard fall to death

இந்த‌ விபத்தில் படுகாயமடைந்த மேலும் இரண்டு பேருக்கு ஈரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தை தொடர்ந்து சம்மந்தப்பட்ட தனியார் பேருந்தை பொதுமக்கள் தாக்கி சேதப்படுத்தினர்.

Three students on footboard fall to death

திருச்செங்கோடு - ஈரோடு சாலையில் பேருந்துகள் அதிக வேகமாக வருவதாகவும், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+