கொலை நகரமாகும் தலைநகரம்: சென்னையில் ஒரே வாரத்தில் 3 பெண்கள் கொலை
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.

மேற்கு மாம்பலம் பகுதியில் பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கணவரை பிரிந்து கடந்த 30 வருடங்களாக தனியாக வசித்து வரும் இவரை,மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு துலங்காத நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் என்ற தெருவில் தனலெட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களாகவே கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
- கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாரதா, 70 பெண் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் குன்றத்தில் தாய், மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.
- கடந்த மே மாதம் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி என்ற புற்றுநோய் மருத்துவர் கொலை செய்யப்பட்டார்.
- ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் ராயப்பேட்டையில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
- ஜூலை மாதம் சென்னை குரோம்பேட்டையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார்.
- கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தனியாக வசித்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications