கொலை நகரமாகும் தலைநகரம்: சென்னையில் ஒரே வாரத்தில் 3 பெண்கள் கொலை
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு மக்கிஸ் கார்டன் பகுதியில் தனலட்சுமி என்ற பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து ஆயிரம் விளக்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்த மூன்று பெண்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்னர் சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் உள்ள வீடு ஒன்றில் தனியாக வசித்து வந்த கோடீஸ்வர பெண் சாந்தி மர்ம நபரால் படுகொலை செய்யப்பட்டார்.

மேற்கு மாம்பலம் பகுதியில் பெண் வழக்கறிஞர் லட்சுமி சுதா என்பவர் நேற்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.கணவரை பிரிந்து கடந்த 30 வருடங்களாக தனியாக வசித்து வரும் இவரை,மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துவிட்டு அவருடைய நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்த இரண்டு கொலைகளையும் செய்தவர்கள் யார் என்பது குறித்து துப்பு துலங்காத நிலையில், இன்று காலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கீஸ் கார்டன் என்ற தெருவில் தனலெட்சுமி என்ற பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்த கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் வீட்டில் தனியாக இருந்த மூன்று பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையில் தனியாக வசிக்கும் பெண்கள் கடந்த சில மாதங்களாகவே கொலை செய்யப்பட்டு வருகின்றனர்.
- கடந்த மார்ச் மாதம் எழும்பூரில் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சாரதா, 70 பெண் கொலை செய்யப்பட்டார். ஏப்ரல் மாதம் குன்றத்தில் தாய், மகள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர்.
- கடந்த மே மாதம் எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து வந்த ரோகினி பிரேம் குமாரி என்ற புற்றுநோய் மருத்துவர் கொலை செய்யப்பட்டார்.
- ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே நாளில் ராயப்பேட்டையில் 4 பெண்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
- ஜூலை மாதம் சென்னை குரோம்பேட்டையில் நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டார்.
- கடந்த திங்கட்கிழமை தொடங்கி இன்று வரை தனியாக வசித்த 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக சென்னை மாறிவருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications