ஜனவரி இறுதியில் 2015 ஆம் ஆண்டு குரூப் தேர்வுகளுக்கான அட்டவணை- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அடுத்த வருடத்திற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று குரூப் 2ஏ காலிப்பணியிடங்களுக்கான கலந்தாய்வில் தேர்வானவர்களுக்கு பணி ஆணையை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் கலந்து கொண்டு டிஎன்பிஎஸ்சி தலைவரான பாலசுப்ரமணியம் பணி ஆணைகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2015 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை ஜனவரி இறுதியில் வெளியிடப்படும்.

இந்த மாதம் நடைபெற்ற குரூப் 1 தேர்வு முடிவு 12 நாளில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications