தனியார் விமானத்தின் முன்சக்கரம் வெடித்து விபத்து: சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு
சென்னை: சென்னை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்றின் முன்சக்கரம் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 6 பேர் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பெங்களூரிலிருந்து சென்னை வந்த தனியார் விமானம் ஒன்றின் முன்சக்கரம் உடைந்து விபத்து நேரிட்டதால் அங்கு விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த விமானத்தில் இருந்த 4 பயணிகள் மற்றும் 2 விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டனர்.

சென்னையில் பலத்த காற்று வீசியதால், விமானம் நிலை தடுமாறி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விமான ஓடுதளத்தில் இந்த விபத்து நடந்ததால் தற்போது சென்னை விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் பகுதியில் பெய்த கனமழையால் விமானம் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் சில விமானங்கள் பெங்களூர் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன.












Click it and Unblock the Notifications