வேல்முருகனை 15 நாட்களுக்கு புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் குண்டடிப்பட்டவர்களை நேரில் சந்திக்க சென்ற வேல்முருகன் கைது செய்யப்பட்டார். அவரை புழல் சிறையில் வைக்குமாறு திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 13 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டனர்.

காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு கூட கூடாது. அதன்படி கமல், ஸ்டாலின், திருமா ஆகியோர் தடையை மீறி தூத்துக்குடி சென்றதால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
அதன்படி தூத்துக்குடிக்கு வந்த வேல்முருகனை விமான நிலையத்தில் கைது செய்தனர். அவர் விழுப்புரம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் அவரை திருக்கோவிலூர் நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
அவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்குமாறும் புழல் சிறையில் அடைக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வேல்முருகன் காவிரி பிரச்சினைக்காக உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை தாக்கிய விவகாரத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications